கனவின் மாயாலோகத்திலே

பாடியவர்: பி. லீலா

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: அன்னையின் ஆணை

நீயே கதி ஈஸ்வரி
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

ஆவியே அமுதே ஆகமப் பொருளே
ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது தர்மம் தானோ? அம்பா

நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி






Designed and maintained by AKR Consultants