இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா?
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
பறவையைப் போலே பறந்திருந்தேனே
பருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா?
உண்மையில் பொயும் உறைவது கண்டேன்
நன்மையில் தீமை நிறைவது கண்டேன்
உண்மையில் பொயும் உறைவது கண்டேன்
நன்மையில் தீமை நிறைவது கண்டேன்
உள்ள்த்தில் ஏதோ மலர்வதைக் கண்டேன்
உறவின் மேன்மை பிரிவில் கண்டேன்
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
