சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: திருவருட் செல்வர்
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை - அந்த
அம்மையில்லாமல் இந்தப் பிள்ளையில்லை
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
பக்திப் பெருக்கில் என்தன் ஊன் உருக - அந்தப்
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்திப் பெருக்கில் என்தன் ஊன் உருக - அந்தப்
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக - என்தன்
சந்ததியே உன்தனுக்கு அடிபணிய இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே - கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே - கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே - வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
