அன்பு மனம் கனிந்த பின்னே

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?

உறவானது மனதில் மணமானது நினைவில் - இதை
மாற்றுவதார் மானே வையக மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில் - இதை
மாற்றுவதார் மானே வையக மீதில்
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?

ஆ.. ஆ...

காத்லுக்கே உலகம் என்று கனவில் கண்டேனே - நான்
கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே
காத்லுக்கே உலகம் என்று கனவில் கண்டேனே - நான்
கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே - இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு - புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு - இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு - புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு

அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants