சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றியவர்: மருதகாசி

இசை:

திரைப்படம்: நல்லவன் வாழ்வான்

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இறக்கம் காட்டத்தான் நாதியில்லே

தினம்
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா?
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?

உயர்ந்தவர தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா

தினம்
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்






Designed and maintained by AKR Consultants