கண்ணன் ஒரு கைக்குழந்தை

பாடியவர்: ஜேசுதாஸ் பி. சுசீலா

இயற்றியவர்:

இசை: இளையராஜா

திரைப்படம்: பத்ரகாளி

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்துப் பாடுகிறேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை

உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?
உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருககும் நாள் வரைக்கும் தஞ்சம் உன்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை உச்சரிககும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்துப் பாடுகிறேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ
ஆராரிரோ ஆராரிரோ

This feature is powered by Dishant.com - Home of Indian Music






Designed and maintained by AKR Consultants