ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை:
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
