SONGS OF

P.B. Srinivas
T.M. Soundararajan
Seerkazhi Govindarajan
Thiruchi Loganathan
C.S. Jayaraman songs

Thiruvarut Chelvar
MGR Madurai Veeram
Aadip perukku
Aadavandha dheivam
Aalaya maNi
annaiyin aaNai











Song: பிறக்கும் போதும் அழுகின்றாய் - pirakkum pothum
Movie: Kavalai illaatha manithan - திரைப்படம்: கவலை இல்லாத மனிதன்
Singers: J.P. Chandrababu பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கண்ணதாசன்
Music: M.S. Viswanathan இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year:

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்றார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants