Movie: Aandavan kattalai - திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
Singers: T.M. Soundararajan, P. Suseela பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கண்ணதாசன்
Music: M.S. Viswanathan இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year:
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
