கோட்டையிலே ஒரு ஆலமரம் - திரைப்படம்: முரடன் முத்து
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்:
இசை:்
கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப் புறா
கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
வெள்ளைப்புறாவின் குடும்பத்திலே வந்து
விழுந்ததம்மா ஒரு கள்ளப்புறா
கள்ளப்புறாவின் செயலாலே இன்று
கலங்குதம்மா ஒரு சின்னப்புறா
கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கண்ணீர்க் கடலில் படகு விட்டு - கரை
கடந்ததம்மா வாழ்ந்த கிளையை விட்டு
வண்ணமலர்க் காலின் பின்னலிலே நடை
வாடுதம்மா தங்கை என்னும் புறா
வாடுதம்மா தங்கை என்னும் புறா
கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
உள்ளவர் வீட்டினுக்கே உறவு வரும் - அந்த
உறவு வந்தால் வீட்டில் பிரிவு வரும்
பிரிந்திருந்தால் நெஞ்சில் ஏக்கம் வரும் - அதன்
பின்பு வரும் பாசம் என்றும் வரும்
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாட்ப்புறா
கோட்டியிலே.....
|
