தரை மேல் பிறக்க வைத்தான்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் வாலி

இசை:

திரைப்படம்: படகோட்டி

உலகத்தின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
ஒரு நாள் பொழுதும் புலராதோ?

தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைத் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளககாய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வருவோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிரை வளர்ப்பவன் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants